விண்வெளியிலிருந்து 6 மாதங்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்கள்
விண்வெளி நிலையத்திலிருந்து சீன விண்வெளி வீரர்கள் பத்திரமாக பூமிக்கு திரும்பினர்.
ஷாங்காய்,
விண்வெளியில் சீனா தங்களுக்கென்று தனி விண்வெளி நிலையத்தை அமைத்து வருகிறது. இதற்காக மூன்று விண்வெளி வீரர்கள் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பூமியில் இருந்து விண்வெளிக்கு சென்றனர்.
இந்த நிலையில், விண்வெளி நிலைய கட்டமைப்பு பணிகளை வெற்றிகரமாக மேற்கொண்ட அவர்கள் ஆறு மாதங்கள் கழித்து தற்போது பத்திரமாக பூமி திரும்பியுள்ளனர்.