அச்சுறுத்தும் எரிபொருள் விலை உயர்வு: அர்ஜெண்டினாவில் லாரி ஓட்டுநர்கள் போராட்டம்
அர்ஜெண்டினாவில் எரிபொருள் விலை உயர்வால் லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
அர்ஜெண்டினா,
அர்ஜெண்டினாவில் எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக அங்குள்ள லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாட்டின் பல்வேறு இடங்களில் தேசிய நெடுஞ்சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்கள், எரிபொருள் விலை உயர்வால் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர்.