திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் தேர் திருவிழா

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் தேர் திருவிழா நடந்தது.

Update: 2017-05-07 22:30 GMT

திருவள்ளூர்,

108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கடந்த 1–ந் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் காலை, மாலை இருவேளையும் சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் செய்யப்பட்டு சிம்ம வாகனம், கருட வாகனம், தங்கசப்பரம் போன்ற பல்வேறு வாகனங்களில் சாமி திருவீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்றுகாலை தேர் திருவிழா நடைபெற்றது.

வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் வீரராகவ பெருமாள், ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவையொட்டி இன்று (திங்கட்கிழமை) சாமிக்கு திருமஞ்சனமும், நாளை (செவ்வாய்க்கிழமை) ஆள்மேல்பல்லக்கு மற்றும் தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் கவுரவ ஏஜன்ட் சி.சி.சம்பத் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

குன்றத்தூர்

குன்றத்தூரில் காமாட்சி அம்மன் உடனுறை திருநாகேச்சர சாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் சித்திரை மாதம் பிரம்மோற்சவ விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 1–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய விழாவாக தேர் திருவிழா நேற்று நடந்தது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவில் குன்றத்தூர், படப்பை, சோமங்கலம், மாங்காடு, பல்லாவரம் என பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வள்ளுவன், பரமசிவம், முன்னாள் கவுன்சிலர் தங்கராஜ் மற்றும் செங்குந்த மகா சபையினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்