சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடர்; பஞ்சாப் அணி அபார வெற்றி!
மற்றொரு ஆட்டத்தில் கேரளா - மேகாலாயா அணிகள் களம் கண்டன.
திருவனந்தபுரம்,
75-வது தேசிய அளவிலான சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடர் போட்டிகள், கேரள மாநிலம் மலப்புரத்தில் நடைபெற்று வருகிறது.
சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடரில், மலப்புரம் கொட்டப்பாடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற குரூப்-ஏ பிரிவு ஆட்டத்தில், பஞ்சாப்-ராஜஸ்தான் அணிகள் பலப்பரிட்சை நடத்தின.
இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி, 4- 0 என்ற கோல் கணக்கில் ராஜஸ்தானை வீழ்த்தியது.
மற்றொரு ஆட்டத்தில் கேரளா - மேகாலயா அணிகள் களம் கண்டன. இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்ததால் போட்டி சமனில் முடிந்தது.