இன்று ஆவணி அமாவாசை.. இந்த நாளில் நீங்கள் பின்பற்ற வேண்டிய சில முக்கிய விஷயங்கள்
தங்கள் குழந்தைகளின் நீண்ட ஆயுள், மகிழ்ச்சியான வாழ்க்கை, மற்றும் செழிப்புக்காக தாய்மார்கள் விரதம் கடைபிடிக்கின்றனர்.;
இந்து மதத்தில், ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை திதிக்கு முக்கியத்துவம் உண்டு. அந்த வகையில், ஆவணி மாதம் வரும் அமாவாசை, பாத்ரபாத அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. மேலும், இது குஷாக்ரஹானி அமாவாசை அல்லது பித்தோரி அமாவாசை என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த நாளில், மூதாதையர்களுக்கு தர்ப்பணம், சிரார்த்தம் செய்வது மட்டுமில்லாது, குழந்தைகளுக்காக வேண்டுவதும், தானம் வழங்குவதும் பழக்கத்தில் உள்ளன.
நாட்காட்டியின்படி, ஆவணி மாத அமாவாசை ஆகஸ்ட் 22 ஆம் தேதி இன்று வெள்ளிக்கிழமை காலை 11:55 மணிக்குத் தொடங்கி, ஆகஸ்ட் 23 ஆம் தேதி நாளை காலை 11:35 மணிக்கு முடிவடைகிறது.
அமாவாசை திதி இரவில் இருப்பது அல்லது தங்குவது அடிப்படையில், ஆவணி அமாவாசை, வெள்ளிக்கிழமை அன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
ஆவணி அமாவாசையின் சிறப்புகள்
பித்தோரி அமாவாசை என்று அழைக்கப்படும் இந்த நாளில், அம்மாக்கள் தங்கள் குழந்தைகளின் நீண்ட ஆயுள், மகிழ்ச்சியான வாழ்க்கை, மற்றும் செழிப்புக்காக விரதம் கடைபிடிக்கின்றனர்
முன்னோர்களுக்கான சடங்குகள்:
எல்லா அமாவாசை அன்றும் தர்ப்பணம் செய்வது போல, ஆவணி அமாவாசை அன்று புனித நதியில் நீராடுவதும், தானம் செய்வதும் இந்த நாளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
குளித்த பிறகு, முன்னோர்களுக்கு தர்ப்பணம், பிண்டம் மற்றும் சிரார்த்த சடங்குகள் செய்யப்படுகின்றன.
ஆவணி அமாவாசை 2025 அன்று என்ன செய்ய வேண்டும். இந்த நாளில் நீங்கள் பின்பற்ற வேண்டிய சில முக்கிய விஷயங்கள்:
அதிகாலையில் எழுந்து, புனித நதியில் அல்லது வீட்டில் கங்கை நீரைத் தண்ணீரில் கலந்து குளிக்கவும். குளித்த பிறகு, சூரிய பகவானுக்கு நீர் அர்ப்பணித்து, கருப்பு எள்ளை ஓடும் நீரில் ஊற்றவும். முன்னோர்களின் ஆன்மா சாந்தியடைய தர்ப்பணம் மற்றும் பிண்டதானம் செய்ய வேண்டும்.
இந்த நாளில், அரச மரத்திற்கு பால் கலந்து தண்ணீர் ஊற்றி, தீபம் ஏற்றவும். அரச மரத்தை ஏழு முறை சுற்றி வர வேண்டும்.
ஆதரவற்றோர் அல்லது ஏழை எளியோருக்கு உணவு, உடைகள், காலணிகள், செருப்புகள் மற்றும் தட்சிணையை தானம் செய்வது மிகவும் புண்ணியமானது.
கால்நடைகளுக்கு உணவு அளிப்பது, கால்நடைகளை பராமரிப்பவர்களுக்கு உதவி செய்வது போன்றவை செய்வதும் புண்ணியம் தரும்.
அமாவாசை தான பலன்கள் :
ஆவணி அமாவாசையில் அளிக்கப்படும் தானம் மிகப் பெரிய புண்ணியத்தை பெற்றுத் தரும். இந்த பொருட்கள் முன்னோர்களின் ஆத்மாக்களுக்கு முக்தியை தருவது மட்டுமின்றி, நம்முடைய வாழ்க்கையில் வளர்ச்சி, முன்னேற்றம், செல்வ வளம் ஆகியவற்றை பெற்றுத் தரும். ஆவணி அமாவாசையில் என்னென்ன பொருட்களை தானமாக அளித்தால் மிகப் பெரிய புண்ணிய பலனும், முன்னோர்களின் ஆசிகளும் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
1. தானியங்கள் :
அரிசி, கோதுமை போன்ற தானியங்களை ஆவணி அமாவாசை நாளில் தானம் அளிப்பது சிறப்பு. அந்தணர்கள் அல்லது ஆதரவு இல்லாதவர்கள், ஏழைகளுக்கு இவற்றை தானம் அளிப்பதால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். முன்னோர்களின் ஆசி கிடைப்பதால் நாம் பித்ருதோஷத்தில் இருந்து விடுபடுவதுடன் பொருளாதார ரீதியாக முன்னேற்றத்தையும், செல்வ வளத்தையும் பெற முடியும்.
2. நெய் :
அமாவாசை நாளில் அருகில் உள்ள கோவிலுக்கு நெய் வாங்கி தானமாக கொடுக்கலாம். கோவிலில் விளக்கேற்றுவதற்கு தேவையான நெய் தானமாக கொடுக்கலாம். விளக்கில் நெய் நிரப்பி கொடுப்பது இன்னும் சிறப்பானது. அதே போல் அமாவாசை அன்று எண்ணெய் தானம் கொடுப்பது நல்லது. இதை தானம் கொடுப்பதால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். இதனால் செல்வ வளம் பெருகும். எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
3. அன்னதானம் :
கோவில்களுக்கு தானியங்கள், வெல்லம், பருப்பு வகைகள் போன்றவற்றை தானம் செய்வது சிறப்பு. ஆதரவு அற்றவர்களுக்கு, ஏழைகளுக்கும் உணவுப் பொருட்களையோ அல்லது சமைத்த உணவுகளையோ தானம் செய்யலாம். தானத்தில் சிந்த தானமாக அன்னதானம் கருதப்படுகிறது. ஏழைகளுக்கு உணவு அளித்து அவர்களின் பசியை போக்குவதன் மூலம் முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடையும். அதோடு நம்முடைய விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். வாழ்க்கையில் வறுமை என்பது ஏற்படாது.
4. ஆடைகள் :
அமாவாசை நாளில் மானத்தை காக்கும் ஆடை தானம் செய்வது சிறப்பானதாகும். பச்சை, சிவப்பு, மஞ்சள் நிற ஆடைகளை தானமாக அளிப்பது சிறந்தது. பயன்படுத்திய ஆடைகளை விட பயன்படுத்தாத ஆடைகளை தானமாக அளிப்பதால் முன்னோர்களின் அருள் கிடைக்கும். அந்தணர்களுக்கு வெள்ளை நிற தைக்காத துணிகளை தானமாக அளிப்பது முன்னோர்களின் ஆசிகளை பெறுவதற்கு ஏற்ற மிகச் சிறந்த வழியாகும்.
5. ஆன்மிக புத்தகங்கள் :
பகவத் கீதை, கருட புராணம், விஷ்ணு புராணம், ஸ்ரீமத் பாகவதம் போன்ற புனிதமான ஆன்மிக நூல்களை தானமாக கொடுப்பது மிகவும் உன்னதமானதாகும். இது முன்னோர்களின் ஆன்மாக்களை பிறவிப் பிணியில் இருந்து விடுபிடித்து, மோட்சத்தை தரும். முன்னோர்களின் நிறைவான ஆசி கிடைப்பதால் வெற்றி, செல்வ வளம், அமைதி, வளர்ச்சி ஆகியவை கிடைக்கும்.