சபரிமலையில் இன்று மகர விளக்கு பூஜை.. ஜோதி வடிவில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-01-2026
சபரிமலையில் இன்று மகர விளக்கு பூஜை.. ஜோதி வடிவில் காட்சி தரும் அய்யப்பன்
சபரிமலையில் முத்தாய்ப்பு நிகழ்வாக இன்று (ஜனவரி 14), மகரவிளக்கு பூஜையும், அதைத் தொடர்ந்து மகரஜோதி தரிசனமும் நடைபெற உள்ளது.
இதையொட்டி கடந்த 2 நாட்களாக தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் சுத்திகிரியை பூஜைகள் நடந்தது. கோவிலில் நேற்று முன்தினம் பிரசாத சுத்தி பூஜைகளும், நேற்று பிம்ப சுத்தி பூஜையும் நடந்தது.
இன்று வழக்கமான பூஜைகளுடன் பிற்பகல் 3.08 மணிக்கு மகர சங்கிராந்தி எனப்படும் மகர சங்கிரம சிறப்பு பூஜையும், சிறப்பு அபிஷேகமும் நடைபெறும். தந்திரி கண்டரு மகேஷ் மோகன் மற்றும் மேல்சாந்தி இ.டி.பிரசாத் நம்பூதிரி ஆகியோர் தலைமையில் இந்த பூஜைகள் நடைபெற உள்ளது.
Update: 2026-01-14 04:45 GMT