இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-01-2026
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
இருவர் உயிரிழப்புக்கு கிருமி கலந்த குடிநீரே காரணம்: திமுக அரசுக்கு அன்புமணி கண்டனம்
அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்றத் தவறிய திமுக அரசுக்கு வளர்ச்சி குறித்து பேச எந்தத் தகுதியும் இல்லை என அன்புமணி தெரிவித்துள்ளார்.
பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ.15 ஆயிரமாக உயர்வு - அன்பில் மகேஷ்
இடைநிலை, பகுதி நேர ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
பொங்கல் பண்டிகை: வீட்டில் பொங்கல் வைக்க நல்ல நேரம்
பொங்கல் தினத்தன்று புதிய பானையில் புது அரிசியிட்டு பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு படையலிட்டு வழிபடுவது வழக்கம்.
மோடி பங்கேற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட 'பராசக்தி' படக்குழு
டெல்லியில் நடந்த பொங்கல் விழாவில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன் உள்பட பராசக்தி படக்குழுவினரும் பங்கேற்றனர்.
பொங்கல் ஒரு உலகளாவிய விழாவாக மாறிவிட்டது: டெல்லியில் விழாவில் பிரதமர் மோடி பேச்சு
டெல்லியில் மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
பாரம்பரிய கட்டிடங்களை காண சென்னை உலா சுற்றுலா பேருந்து சேவை தொடக்கம்
அரை மணி நேரத்துக்கு ஒரு பஸ் வீதம் பஸ் நிலையங்களுக்கு வரும். அதில் ரூ.50 கட்டணம் செலுத்தி டிக்கெட் பெற்று பயணிக்கலாம்.
தாய்லாந்து: ரெயில் மீது கிரேன் சரிந்ததில் 22 பேர் பலி
ரெயில் செல்லும் பாதையில் அதிவிரைவு ரெயில் திட்டம் சார்ந்த பணிகள் நடந்து வந்துள்ளன.
மும்பை மாநகராட்சி தேர்தல்: இந்திய பங்குச் சந்தைக்கு நாளை விடுமுறை
மாநகராட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தைக்கு நாளை (வியாழக்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை எவ்வித பங்கு வர்த்தகமும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு மக்களுக்கு தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி
வளமான தமிழ் பாரம்பரியங்களின் உன்னதமான அடையாளமாக பொங்கல் பண்டிகை திகழ்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சபரிமலையில் நெய் விற்பனை முறைகேடு: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த கேரள ஐகோர்ட்டு உத்தரவு
சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படும் நெய்யில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கு கேரள ஐகோர்ட்டு நீதிபதிகள் வி.ராஜா விஜயராகவன், கே.வி.ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.