சோமாலியா கடலோரம் கப்பல் மீது கடற்கொள்ளையர்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 06-11-2025

சோமாலியா கடலோரம் கப்பல் மீது கடற்கொள்ளையர்கள் திடீர் தாக்குதல்

சோமாலியா நாட்டில் சமீப நாட்களாக கடற்கொள்ளையர்களின் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. இந்நிலையில், மால்டா நாட்டு கொடியுடன் கூடிய கப்பல் ஒன்றை சோமாலியா கடற்கரையோரம் வைத்து கடற்கொள்ளையர்கள் இன்று திடீரென தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக இங்கிலாந்து நாட்டு ராணுவத்தின் கடல்சார் வர்த்தக செயல்பாடுகளுக்கான மையம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அந்த பகுதியில் செல்ல கூடிய கப்பல்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.

Update: 2025-11-06 09:44 GMT

Linked news