“அன்பு, அமைதி, சகோதரத்துவம் நிலைக்க வேண்டும்” -... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 25-12-2025
“அன்பு, அமைதி, சகோதரத்துவம் நிலைக்க வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி கிறிஸ்துமஸ் வாழ்த்து
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், அதிகாரிகள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட செய்தியில், அன்பால் உலகை ஆட்கொண்ட தேவகுமாரனாகிய இயேசுபிரான் அவதரித்த இந்த நன்னாளில், உலகெங்கும், அன்பு-அமைதி-சத்தியம் நிலைக்கவும், சகோதரத்துவம் தழைக்கவும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-12-25 05:04 GMT