ரூ.90 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை...இன்றைய நிலவரம் என்ன?
விரைவில் ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை எட்டும் என்று கூறப்படும் நிலையில், அதற்கு ஏற்ப தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது.;
சென்னை,
தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. கடந்த 23-ந்தேதி ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்தை தாண்டி, இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 26-ம் தேதி மீண்டும் விலை அதிகரித்தது.
இதற்கிடையில் நேற்று தங்கம் விலை 2 முறை அதிகரித்தது. காலை நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ.60-ம், சவரனுக்கு ரூ.480-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 700-க்கும், ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
மிண்டும் மாலை அதிகரித்தது, அதன்படி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ஒரு சவரன் 86,160க்கும், கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ஒரு கிராம் 10,770க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், தங்கம் விலை இன்று (30-09-2025) ரூ.90 ஆயிரத்தை நெருங்கி இருக்கிறது. அதன்படி சென்னையில் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ.90-ம், சவரனுக்கு ரூ.720-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 860-க்கும், ஒரு சவரன் ரூ.86 ஆயிரத்து 880-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல், வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ரூ.1,000-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.161-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 61 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-
30.09.2025 ஒரு சவரன் ரூ.86,880 (இன்று)
29.09.2025 ஒரு சவரன் ரூ.86,160
27.09.2025 ஒரு சவரன் ரூ.85,120
26.09.2025 ஒரு சவரன் ரூ.84,400
25.09.2025 ஒரு சவரன் ரூ.84,080