கடும் சரிவுடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்
இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர்.;
மும்பை,
இந்திய பங்குச்சந்தை இன்று (14.10.2025 - செவ்வாய்கிழமை) கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. சர்வதேச நிலையற்ற தன்மை, அமெரிக்கா - சீனா வர்த்தக மோதல், முதலீட்டாளர்கள் லாபத்தை பதிவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.
அதன்படி, 115 புள்ளிகள் சரிந்த நிப்டி 25 ஆயிரத்து 114 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 306 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 56 ஆயிரத்து 327 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது .
115 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 26 ஆயிரத்து 769 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 382 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 81 ஆயிரத்து 941 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
150 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 38 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 423 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 63 ஆயிரத்து 530 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர்.