சரிவுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்
இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர்.;
மும்பை,
இந்திய பங்குச்சந்தை இன்று (22.07.2025 - செவ்வாய்கிழமை) சரிவுடன் நிறைவடைந்தது. அதன்படி, 29 புள்ளிகள் சரிந்த நிப்டி 25 ஆயிரத்து 60 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 196 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 56 ஆயிரத்து 756 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதேவேளை, 3 புள்ளிகள் ஏற்றம்பெற்ற பின் நிப்டி 26 ஆயிரத்து 990 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 13 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த சென்செக்ஸ் 82 ஆயிரத்து 186 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
94 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 206 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 111 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 63 ஆயிரத்து 434 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர்.