சரிவுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்

இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர்.;

Update:2025-06-23 20:47 IST

மும்பை.

வார தொடக்க நாளான இன்று (23.6.2025 - திங்கட்கிழமை) இந்திய பங்குச்சந்தை சரிவுடன் நிறைவடைந்தது. அதன்படி, 140 புள்ளிகள் சரிந்த நிப்டி 24 ஆயிரத்து 971 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 193 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 56 ஆயிரத்து 59 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

92 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 26 ஆயிரத்து 556 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 511 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த சென்செக்ஸ் 81 ஆயிரத்து 896 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

அதேவேளை, 48 புள்ளிகள் அதிகரித்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 33 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 237 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 63 ஆயிரத்து 174 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்