ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்
இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.;
மும்பை.
இந்திய பங்குச்சந்தை இன்று (23.07.2025 - புதன்கிழமை) ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதன்படி, 159 புள்ளிகள் ஏற்றம்பெற்ற நிப்டி 25 ஆயிரத்து 219 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 454 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 57 ஆயிரத்து 210 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதேவேளை, 225 புள்ளிகள் உயர்ந்த பின்நிப்டி 27 ஆயிரத்து 215 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 539 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 82 ஆயிரத்து 726 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
69 புள்ளிகள் ஏற்றம்பெற்ற மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 276 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 473 புள்ளிகள் ஏற்றம்பெற்ற பேங்க் எக்ஸ் 63 ஆயிரத்து 908 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.