டெல்லி உள்பட வடமாநிலங்களில் கடும் குளிர்: மக்கள் அவதி

டெல்​ல்லி மற்றும் அதன் சுற்​றுப்​புறப் பகு​தி​களில் மூடு​பனி​யுடன் கூடிய குளிர் அலை வீசுகிறது. இதனால், மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.;

Update:2026-01-11 09:08 IST

புதுடெல்லி,

டெல்​லி​யில் கடும் குளிர் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. நேற்று காலை குறைந்​த​பட்ச வெப்​பநிலை 4.2 டிகிரி செல்​சி​யஸாக குறைந்​தது. டெல்​லி​யில் நடப்பு குளிர்​காலத்​தில் பதி​வான மிகக் குறைந்த வெப்​பநிலை​ இதுவாகும். டெல்​லியிலும் அதன் சுற்​றுப்​புறப் பகு​தி​களிலும் மூடு​பனி​யுடன் கூடிய குளிர் அலை வீசுகிறது. இதனால், மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

உத்​தரபிரதேசம், பஞ்​சாப், ஹரி​யானா உட்பட வட மாநிலங்​கள் முழு​வதும் அடுத்த 3 நாட்​களுக்கு கடுமை​யான குளிர் அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது. இந்த மாநிலங்​களி​லும் டெல்​லியைப் போன்​று, மிகக் குளி​ரான காலைப் பொழுது 4.2 டிகிரி செல்​சி​யஸில் பதி​வாகி உள்​ளது.

மலைப்பிரதேசங்களான இமாச்சல பிரதேசம் மற்​றும் உத்​த​ராகண்​டிலும் கடுமை​யான குளிர் நில​வு​கிறது. சில இடங்​களில் உறைபனி​யும் காணப்​படு​கிறது. உறைபனி​யுடன் கூடிய கடும் குளிர் காரண​மாக வட மாநிலங்​களின் வி​மானங்​கள் மற்​றும் ரயில் சேவை​களில்​ தொடர்ந்​து தாமதம்​ ஏற்​பட்​டு வரு​கிறது. வாகன ஓட்டிகள் அதிகாலை வேளைகளில் வாகனங்களில் செல்ல கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்