கல்லூரி மாணவி மாயம்

புதுவை ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவி மாயம் ஆனார்.

Update: 2023-08-14 17:25 GMT

புதுச்சேரி

புதுவை ரெட்டியார்பாளையம் புதுநகரை சேர்ந்தவர் அருள்ஜோதி (வயது 39). இவரது மகள் விஜயலட்சுமி (19). முத்தியால்பேட்டையில் உள்ள அரசு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின்பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவி விஜயலட்சுமியை தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்