'பிரதமர் மோடி முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை கூறி வருகிறார்' - நாராயணசாமி விமர்சனம்

பிரதமர் மோடி தனது ஆட்சியின் சாதனைகளை சொல்லாமல் குழம்பிப் போய் பேசி வருகிறார் என நாராயணசாமி விமர்சித்துள்ளார்.

Update: 2024-05-09 14:29 GMT

புதுச்சேரி,

தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி முன்னுக்குப்பின் முரணான கருத்துக்களை கூறி வருவதாக புதுச்சேரி முன்னாள் முதல்-மந்திரி நாராயணசாமி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"3 கட்ட தேர்தல்களின் பிரசாரத்திலும் பிரதமர் நரேந்திர மோடி முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை கூறி வருகிறார். 10 ஆண்டுகால ஆட்சியில் அவர் என்ன சாதனை செய்தார் என்று பட்டியல் போட்டு சொல்லாமல் குழம்பிப் போய் பேசிக்கொண்டிருக்கிறார்.

'இந்தியா' கூட்டணி 3 கட்ட தேர்தலில் முன்னணியில் இருக்கிறது. கண்டிப்பாக 7 கட்ட தேர்தலும் முடிவடைந்த பிறகு 'இந்தியா' கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்கும்."

இவ்வாறு நாராயணசாமி தெரிவித்துள்ளார்.


Full View

Tags:    

மேலும் செய்திகள்