கட்டிட தொழிலாளியை தாக்கியவர் கைது

அரியாங்குப்பம் அருகே கட்டிட தொழிலாளியை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-06-27 21:00 IST

அரியாங்குப்பம்

தவளக்குப்பம் சடா நகர் வேதவள்ளி வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 26). கட்டிட தொழிலாளி. இவர் தனது நண்பர் அரியுடன் தவளக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் மதுபான பாருக்கு சென்று 8 பீர் பாட்டில்களை வாங்கி அட்டைப்பெட்டியில் வைத்தார்.

அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் அவர்களிடம் ஓசியில் பீர் கேட்டு தகராறு செய்து பீர்பாட்டிலால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் தவளக்குப்பம் அடுத்த தமிழக பகுதியான பெரிய காட்டு பாளையத்தைச் சேர்ந்த அரவிந்தன் (22), அவரது நண்பர் விக்கி (22) உள்பட 4 பேர் சேர்ந்து மணிகண்டனையும், அரியையும் தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து அரவிந்தனை போலீசார் கைது செய்தனர். மற்ற 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்