ஊட்டியில் பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த ஓட்டல் ஊழியர் கைது

மலப்புரத்தை சேர்ந்த நித்திஷ் என்பவர் பெண்கள் குளிப்பதை செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ளார்.;

Update:2025-08-08 00:54 IST

நீலகிரி,

கேரள மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த 5-ந் தேதி தனது குடும்பத்துடன் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா வந்தார். தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கினர். அங்குள்ள குளியல் அறையில் இளம்பெண் குளித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென செல்போன் டார்ச் லைட் வெளிச்சம் வந்து உள்ளது.

இதனால் பயந்து போன அவர், சுற்றி பார்த்துள்ளார். அப்போது அருகில் உள்ள அறையில் இருந்து சிறிய துளை வழியாக செல்போன் மூலம் ஒருவர் வீடியோ எடுப்பது தெரிய வந்தது. அது ஓட்டல் ஊழியர்கள் தங்கும் அறை என்பதும் தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண், இதுகுறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தெரிவித்து உள்ளார்.

அதன்பேரில் ஊட்டி மேற்கு போலீசார் ஓட்டலுக்கு சென்று விசாரணை நடத்தினர். அதோடு அங்கிருந்த ஊழியர்களின் செல்போன்களை வாங்கி சோதனை செய்தனர். இதில் கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த நித்திஷ் (வயது 30) என்பவர் இளம்பெண் குளிப்பதை செல்போன் மூலம் வீடியோ எடுத்ததும் ஏற்கனவே 5-க்கும் மேற்பட்ட பெண்களை வீடியே எடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து நித்திஷை போலீசார் கைது செய்தனர். 

மேலும் செய்திகள்