மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மறுநாள் மின்தடை
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், கடையநல்லூர் கோட்டங்களில் உள்ள துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் மாதாந்திர மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.;
திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட தென்காசி மாவட்டத்தில் உள்ள பின்வரும் துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் (20.9.2025, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் பின்வரும் இடங்களில் மின்தடை செய்யப்படும்.
சங்கரன்கோவில் கோட்ட செயற்பொறியாளர் பாலசுப்ரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மலையாங்குளம், நக்கலமுத்தன்பட்டி ஆகிய துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் (20.9.2025, சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மலையாங்குளம், சிதம்பராபுரம், செவல்குளம், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி ஆகிய ஊர்களுக்கும், நக்கலமுத்தன்பட்டி, இளையரசனேந்தல், கொம்பன்குளம், வெங்கடாசலபுரம், புளியங்குளம் அய்யனேரி, அப்பனேரி, ஆண்டிப்பட்டி, மைப்பாறை ஆகிய ஊர்களுக்கும் மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் கற்பகவிநாயகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
விஸ்வநாதபேரி துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் (20.9.2025, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பின்வரும் இடங்களில், பின்வருமாறு குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் இருக்காது.
காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை:
சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதபேரி, தெற்குசத்திரம், வடக்குசத்திரம், வழிவழிக்குளம், மேலகரிசல்குளம், ராயகிரி, கொத்தாடைப்பட்டி மற்றும் வடுகப்பட்டி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.
மேலும் கடையநல்லூர் கோட்டத்திற்குட்பட்ட கடையநல்லூர் துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் (20.9.2025, சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கடையநல்லூர், முத்துகிருஷ்ணாபுரம், பேட்டை, மாவடிக்கால், குமந்தாபுரம், முத்துச்சாமிபுரம், வலசை, கருப்பாநதி, தார்க்காடு, போகநல்லூர், கண்மணியாபுரம், பாலஅருணாச்சலபுரம், கம்பனேரி, மங்களபுரம், அச்சம்பட்டி, பொய்கை, ஊர்மேல்அழகியான், வேலாயுதபுரம், இடைகால், சிவராம்பேட்டை, கொடிக்குறிச்சி மற்றும் நயினாரகரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.