புரோ கபடி: புனே அணியை வீழ்த்தி அரியானா வெற்றி
முதல் ஆட்டத்தில் புனேரி பால்டன்- அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின.;
ஜெய்ப்பூர்,
12 அணிகள் இடையிலான 12-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதன்படி இரவு 8 மணிக்கு தொடங்கிய முதல் ஆட்டத்தில் புனேரி பால்டன்- அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய அரியானா ஸ்டீலர்ஸ் 34-30 என்ற புள்ளிக்கணக்கில் புனேரி பால்டன் அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.
தொடர்ந்து நடைபெறும் 2வது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்- தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன