திருப்பூர்: பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது.;

Update:2025-11-22 14:24 IST

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். கோவிலின் அடிவாரத்தில் இருந்து சுமார் 950 மீட்டர் உயரத்தில் பஞ்சலிங்க அருவி உள்ளது.

அருவிக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் ஓடைகள் நீர்வரத்தை அளித்து வருகிறது. இதனால், இந்த அருவிக்கு சுற்றுலா பயணிகள் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வந்து குளித்து வருகின்றனர்.

இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால், திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் நீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் இன்று குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்