தமிழகத்தில் இன்று 30 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
சென்னை, செங்கல்பட்டு உள்பட பல்வேறு மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.;
சென்னை,
தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் இன்று 30 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி,விழுப்புரம், மதுரை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், கிருஷ்ணகிரி, ஈரோடு, தர்மபுரி, நாமக்கல், திருப்பத்தூர் மாவட்டங்களில் மழைக்கும் வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, நீலகிரி, கோவை, தேனி, நெல்லை மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.