வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து களம் இறங்கும் திருநங்கை

எந்தவொரு அரசியல் கட்சியும் திருநங்கைகளை வேட்பாளராக அறிவிப்பது இல்லை என்று திருநங்கை ஹேமாங்கி சகி கூறியுள்ளார்.

Update: 2024-04-10 09:54 GMT

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து திருநங்கை மகாமண்டலேஸ்வர் ஹேமாங்கி சகி (வயது46) களம் இறங்குகிறார். உ.பி., நிர்மோகி அகாடா என்ற சாதுக்கள் அமைப்பை சேர்ந்த திருநங்கை மகாமண்டலேஸ்வர் ஹேமாங்கி சகி. இவருக்கு வயது 46. துறவியான இவர் உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து இந்து மதத்தைப் பரப்பி வருகிறார்.

இந்தநிலையில், வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து அகில பாரத மகா இந்து சபையின் வேட்பாளராக மகாமண்டலேஸ்வர் ஹேமாங்கி சகி போட்டியிடுகிறார். இது குறித்து திருநங்கை சகி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-எந்தவொரு அரசியல் கட்சியும் திருநங்கைகளை வேட்பாளராக அறிவிப்பது இல்லை என்று திருநங்கை ஹேமாங்கி சகி கூறியுள்ளார்.

நான் பிரதமர் மோடிக்கு எதிராக போட்டியிடவில்லை. திருநங்கைகளின் உரிமைகளுக்கு குரல் கொடுப்பதற்காக அரசியலில் களம் இறங்கியுள்ளேன். திருநங்கைகளுக்கு மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை. மத்திய அரசின் சார்பில் திருநங்கைகள் நலனுக்காக தனி இணையதளம் தொடங்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதுகுறித்து மத்திய அரசு விளம்பரம் செய்வதில்லை. எந்தவொரு அரசியல் கட்சியும் திருநங்கைகளை வேட்பாளராக அறிவிப்பது இல்லை. அகில இந்திய இந்து மகா சபை என்னை வேட்பாளராக அறிவித்து நாட்டுக்கு முன்னுதாரணத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்