கிரிக்கெட் போட்டியின்போது குண்டு வெடிப்பு...பலர் உயிருக்கு போராட்டம்
கவுசர் மைதானத்தில், வீரர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.;
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில் பஜாவூர் மாவட்டத்தில் கிரிக்கெட் போட்டியின்போது வெடி குண்டு வெடித்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஜாவூர் மாவட்டத்தில் இருக்கும் கவுசர் மைதானத்தில், வீரர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென க்திவாய்ந்த வெடிகொண்டு வெடித்துள்ளது. இதில் சம்பவ இடத்திலே ஒருவர் உயிரிந்துள்ளார். மேலும் ஏராளமானோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.