முதல் ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.;

Update:2025-11-30 13:12 IST

ராஞ்சி,

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையே முதலில் நடந்த 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் தென்ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது. 25 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரை வென்று அசத்தியது. இதைத்தொடர்ந்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. இதில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் உள்ள ஜார்கண்ட் மாநில கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

இந்தியா:

ரோகித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ருதுராஜ் கெய்க்வாட், வாஷிங்டன் சுந்தர், கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா.

தென்ஆப்பிரிக்கா:

ரியான் ரிக்கெல்டன், குயின்டன் டி காக், மார்க்ரம், மேத்யூ ப்ரீட்ஸ்கே, டோனி டி ஜோர்ஜி, டெவால்ட் ப்ரீவிஸ், மார்கோ ஜான்சன், கார்பின் போஷ், ப்ரீனெலன் சுப்ரயன், நந்த்ரே பர்கர், ஒட்னீல் பார்ட்மேன். 

Tags:    

மேலும் செய்திகள்