ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: சென்னையை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற நார்த் ஈஸ்ட் யுனைடெட்

11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது .;

Update:2025-03-03 21:48 IST

image courtesy; @IndSuperLeague / @NEUtdFC / @ChennaiyinFC

சென்னை ,

13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று சென்னையில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதின.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி முதல் பாதியிலேயே 3 கோல்கள் (7, 26, 38-வது நிமிடம்) அடித்து அசத்தியது. இதன் காரணமாக முதல் பாதி முடிவில் 3-0 என நார்த் ஈஸ்ட் யுனைடெட் முன்னிலை பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் பதில் கோல் திருப்ப சென்னை கடுமையாக போராடியது. ஆனால், இந்த போராட்டத்திற்கு இறுதிவரை பலன் கிடைக்கவில்லை. இறுதியில் இந்த ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் சென்னையை வீழ்த்தி நார்த் ஈஸ்ட் யுனைடெட் அபார வெற்றி பெற்றது. 

Tags:    

மேலும் செய்திகள்