Daily Thanthi 2024-01-02 03:55:34.0

பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க திருச்சி வந்தடைந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

பிரதமர் மோடி இன்று திருச்சி வர உள்ளார். அவர் பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். பின்னர், திருச்சி விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள முனையத்தை திறந்து வைக்கிறார். மேலும், அங்கு நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி 19 ஆயிரத்து 850 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய மற்றும் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சிகளில் கவர்னர் ஆர்.என். ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பலர் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி வந்தடைந்தார். சென்னையில் இருந்து தனிவிமானம் மூலம் முதல்-அமைச்சர் திருச்சி சென்றடைந்தார். திருச்சி சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை விமான நிலையத்தில் வரவேற்க உள்ளார்.


Next Story