பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது


பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது
x

காரைக்கால் அருகே பணம் வைத்து சூதாடிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

காரைக்கால்

காரைக்கால் நேருநகர் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் காரைக்கால் நகர இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன், சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் நேருநகர் விரிவாக்கம் பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கு ஒரு தோட்டத்தின் பின்புறத்தில் பந்தல் அமைத்து ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடியது. இதனை பார்த்த போலீசார் அந்த கும்பலை சுற்றிவளைத்து பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் அந்த பகுதியை சேர்ந்த நாகலிங்கம் (45), சீனிவாசன் (32), சபியுல்லா (32), ரமேஷ் (50), நாகராஜ் (38), மாரிமுத்து (47), பழனிவேல் (52) என்பது தெரியவந்தது. அவர்கள் 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 மோட்டார் சைக்கிள்கள், 5 செல்போன்கள் மற்றும் ரூ.15 ஆயிரம் பறிமுதல் செய்தனர்.


Next Story