கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது


கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது
x

நைனார்மண்டபத்தில் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

முதலியார்பேட்டை

புதுச்சேரி முதலியார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் நேற்று இரவு நைனார்மண்டபம் சுகாதார ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வாலிபர் ஒருவர் கையில் 2 கத்தியுடன் நின்று கொண்டு பொதுமக்களை மிரட்டிக்கொண்டு இருந்தார். உடனே போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முருங்கப்பாக்கத்தை சேர்ந்த வெற்றி என்கிற வெற்றிவேல் (வயது 22) என்பதும், இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 2 கத்திகளை பறிமுதல் செய்தனர்.


Next Story