மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
x

புதுவை பெரிய மார்க்கெட்டை படிப்படியாக கட்டக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுச்சேரி

புதுவை பெரிய மார்க்கெட்டை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக அங்குள்ள கடைகளை ஒட்டுமொத்தமாக காலி செய்துவிட்டு பணிகளை செய்யப்போவதாக அறிவித்துள்ளது. இதற்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஒட்டுமொத்தமாக கடைகளை காலி செய்யாமல் பகுதி பகுதியாக காலி செய்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வியாபாரிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தியும், குபேர் மார்க்கெட் வியாபாரிகளுக்கு கடைகளை ஒதுக்கக்கோரியும், நெல்லித்தோப்பு மார்க்கெட் கட்டுமான பணிகளை தொடங்கக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் காந்திவீதி-நேரு வீதி சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் மதிவாணன் தலைமை தாங்கினார். முன்னாள் மாநில செயலாளர் முருகன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாநில செயலாளர் ராஜாங்கம் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் சீனுவாசன், ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story