மோட்டார் சைக்கிள் திருட்டு


மோட்டார் சைக்கிள் திருட்டு
x

மூலக்கடை அருகே தனியார் ஊழியரின் மோட்டார் திருட்டு. போலீசார் வழக்குப்பதிவு

மூலக்குளம்

வில்லியனூர் மூலக்கடை பகுதியை சேர்ந்தவர் வினோத் (வயது 30). இவர் எல்லைபிள்ளைசாவடியில் உள்ள தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளை இன்சூரன்ஸ் அலுவலகம் முன் நிறுத்திவிட்டு சென்றார்.மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. யாரோ அதை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடு போன மோட்டார் சைக்கிளை தேடி வருகின்றனர்.


Next Story