மோட்டார் சைக்கிள் திருட்டு


மோட்டார் சைக்கிள் திருட்டு
x

திருபுவனையை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரின் மோட்டார் சைக்கிளை மர்ம நபர்களால் திருட்டு, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருபுவனை

திருபுவனையை சேர்ந்தவர் ராஜதுரை (வயது 27). அங்குள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று மதகடிப்பட்டு வாரச்சந்தைக்கு சென்ற ராஜதுரை, தனது மோட்டார் சைக்கிளை சாலையோரம் நிறுத்திவிட்டு காய்கறி வாங்க சென்றார். சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. யாரோ மர்மநபர் மோட்டார் சைக்கிளை திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து திருபுவனை போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருடுபோன மோட்டார் சைக்கிளை தேடி வருகின்றனர்.


Next Story