மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் காயம்
காரைக்கால் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் காயம் அடைந்தார்.
காரைக்கால்
திருநள்ளாறு அருகே சேத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 62). இவர் தென்னங்குடி பகுதியில் தனது மகன் முரளி நடத்தி வரும் சிமெண்டு கடையில் இருந்து மதியம் உணவு சாப்பிட சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். அம்பகரத்தூர் - திருநள்ளாறு மெயின்ரோட்டைகடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ராஜேந்திரன் மீது மோதியது. இதில் காலில் படுகாயம் அடைந்த அவர் உடனடியாக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். விபத்து குறித்து முரளி அளித்த புகாரின்பேரில் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story