கஞ்சா விற்ற வாலிபர் கைது


கஞ்சா விற்ற வாலிபர் கைது
x

அரியாங்குப்பம் அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

அரியாங்குப்பம்

அரியாங்குப்பம் மாதா கோவில் அருகே தனியார் மற்றும் அரசு பள்ளிகள் உள்ளன. இந்த பகுதியில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அரியாங்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகானந்தம், பழனிசாமி மற்றும் போலீசார் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த ஒருவரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர், மணவெளி ராஜபிரியா நகரை சேர்ந்த அப்துல்கலாம் (வயது 20) என்பதும், பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 125 கிராம் கஞ்சா, ஒரு செல்போன், ஒரு மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.


Next Story