தமிழ்நாட்டிற்கு உண்மையான எதிரி தி.மு.க.தான் - அண்ணாமலை பேச்சு


தமிழ்நாட்டிற்கு உண்மையான எதிரி தி.மு.க.தான் - அண்ணாமலை பேச்சு
x
தினத்தந்தி 29 March 2024 2:46 PM GMT (Updated: 29 March 2024 2:46 PM GMT)

மழை வெள்ளத்தில் தத்தளிக்கக்கூடிய நகரமாக சென்னையை மாற்றியிருப்பதுதான் தி.மு.க.வின் சாதனை என்று அண்ணாமலை கூறியுள்ளார்.


சென்னை,

நாடாளுமன்ற தேர்தலில் வடசென்னை தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் பால்கனகராஜை ஆதரித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை திருவெற்றியூரில் பிரசாரம் செய்தார். தொடர்ந்து, மத்திய சென்னையில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வினோஜ் செல்வத்தை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

"பிரதமர் மோடி தமிழகத்திற்கும் தமிழ் மக்களுக்கும் எதிரி என்று தி.மு.க.வினர் சொல்கின்றனர். உண்மையில் ஒரு எதிரி தமிழ்நாட்டில் தமிழினத்திற்கு எதிராக இருக்கிறார்கள் என்றால் அது, அண்ணன் ஸ்டாலினும் தி.மு.க.வும்தான். அவர்கள்தான் உண்மையான எதிரி. தமிழகத்தின் வளர்ச்சியை குழிதோண்டி புதைத்துவிட்டார்கள்.

2024 தேர்தல் முற்றிலும் மாறுபட்ட தேர்தல். இந்தியாவிலேயே முதல்முறையாக, தேர்தலில் ஓட்டு போடுவதற்கு முன்பாகவே, யார் பிரதமர் என்று தீர்மானிக்கப்பட்ட தேர்தல்.

எப்போது மழை வந்தாலும், மழை வெள்ளத்தில் தத்தளிக்கக்கூடிய ஒரு நகரமாக சென்னையை மாற்றியிருப்பதுதான் தி.மு.க.வின் சாதனை. சமநீதி, சமூக நீதி உயிர்மூச்சாக வாழக்கூடியது பா.ஜ.க. நீங்கள் வாக்களிப்பது உங்களுக்காக அல்ல; உங்கள் தலைமுறைக்காக." என்று கூறினார்.


Next Story