சாய்பல்லவியின் பெரிய மகிழ்ச்சி


சாய்பல்லவியின் பெரிய மகிழ்ச்சி
x

என்.ஜி.கே. படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு என் வாழ்நாளில் எனக்கு கிடைத்த பெரிய மகிழ்ச்சி என்று சாய்பல்லவி கூறினார்.

தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ள சாய்பல்லவி தனது வாழ்க்கையில் அனுபவித்த பெரிய மகிழ்ச்சி குறித்து பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ''நான் சினிமாவுக்கு பெரிய கனவுகளோடு வரவில்லை. கல்லூரி நாட்களில் இருந்தே சூர்யா என்றால் இஷ்டம். சூர்யா படம் ரிலீஸ் ஆகிறது என்றால் முதல் நாள் முதல் காட்சியை பார்த்துவிட ஆர்வப்படுவேன். நான் நேசிக்கும் அவரை வாழ்நாளில் ஒரு முறையாவது அருகில் இருந்து பார்க்க வேண்டும் என்று கனவு கண்டேன். சினிமாவிற்கு வந்த பிறகு அவரோடு சேர்ந்து திரையை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு வந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன்.

ஒரு வேளை வாய்ப்பு வராவிட்டால் சூர்யாவை சந்தித்து அவர் மீது எனக்கு இருக்கும் நேசத்தை சொல்ல வேண்டும் என விரும்பினேன். அப்படிப்பட்ட எனக்கு என்.ஜி.கே. படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு வந்தது. இந்த விஷயம் தெரிந்த உடனே பெரிய ஆனந்த நடனமே ஆடிவிட்டேன். அந்த ஆனந்தத்தை என்னால் வார்த்தைகளால் வர்ணிக்கவே முடியாது. அவருடன் நடித்ததுதான் என் வாழ்நாளில் எனக்கு கிடைத்த பெரிய மகிழ்ச்சி" என்றார்.


Next Story