ஐ.பி.எல்: கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சு தேர்வு
![ஐ.பி.எல்: கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சு தேர்வு ஐ.பி.எல்: கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சு தேர்வு](https://www.dailythanthi.com/h-upload/uid/kfzCWecQAtKmFeVLE2xIrO8SYYhumWZY.jpg)
கொல்கத்தா அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
துபாய்,
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற உள்ள 45-வது லீக் ஆட்டத்தில் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் கே.எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரிட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன்
கே.எல் ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து, கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
கடைசி 4 ஆட்டங்களில் 3-ல் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி பிளே-ஆப் சுற்று வாய்ப்பிலும் நீடிக்கிறது. 10 புள்ளிகளுடன் (5 வெற்றி, 6 தோல்வி) உள்ள கொல்கத்தா அணி எஞ்சிய 3 ஆட்டங்களிலும் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.
பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை 11 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 7 தோல்வி என 8 புள்ளியுடன் 6-வது இடம் வகிக்கிறது. அந்த அணி மீதமுள்ள 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று, சில அணிகளின் முடிவு சாதகமாக அமைந்தால் மட்டுமே ‘பிளே-ஆப் ’ சுற்றை பற்றி நினைத்து பார்க்க முடியும்.
அதனால் இரு அணிகளுக்கும் இது வாழ்வா-சாவா மோதல் தான்.
பஞ்சாப் அணியில் மாற்றங்களாக மயங்க் அகர்வால், பேபியன் ஆலன், ஷாருக் கான் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கொல்கத்தா அணியில் மாற்றங்களாக டிம் செய்ப்பர்ட், ஷிவம் மாவி சேர்க்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story