ஐ.பி.எல் மெகா ஏலம் :இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டனை ரூ 11.50 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் அணி
இரண்டாம் நாளாக இன்று மீண்டும் இந்த ஏலம் தொடங்கியது
பெங்களூரு ,
15-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் கடைசி வாரத்தில் தொடங்குகிறது. இந்த முறை வழக்கமான 8 அணிகளுடன் கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் புதிதாக இணைந்துள்ளன. அதற்கான மெகா ஏலம் நேற்று மதியம் 12 மணிக்கு தொடங்கியது.
மதியம் தொடங்கிய இந்த மெகா ஏலம் நேற்று இரவு 9.30 மணியளவில் நிறைவடைந்தது.
இரண்டாம் நாளாக இன்று மீண்டும் இந்த ஏலம் தொடங்கியது.இன்றைய ஏலத்தில் இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டனை ரூ 11.50 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது.
Related Tags :
Next Story