ஐபிஎல் : தவான் ,மயங்க் அகர்வால் அதிரடி : பஞ்சாப் அணி 198 ரன்கள் குவிப்பு
![Image Courtesy : IPL Image Courtesy : IPL](https://img.dailythanthi.com/Articles/2022/Apr/202204132130424202_IPL-Dhawan-Mayang-Agarwal-Action-Punjab-team-accumulates_SECVPF.gif)
பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது.
மும்பை,
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் சுவாரசியமாக சென்று கொண்டு இருக்கிறது. இந்நிலையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் மும்பை -பஞ்சாப் அணிகள் மோதுகின்றன .
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்களாக தவான் ,மயங்க் அகர்வால் களமிறங்கினார் .தொடக்கம் முதல் மும்பை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர் பந்துகளை பவுண்டரி ,சிக்சருக்கு பறக்க விட்டனர்.
அதிரடியாக விளையாடிய இருவரும் பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 65 ரன்கள் சேர்த்தது .சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர் .மயங்க் அகர்வால் 52 ரன்களிலும் ,தவான் 70 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
கடைசி நேரத்தில் ஜிதேஷ் சர்மா ,ஷாருக்கான் அதிரடி காட்ட, பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது.
Related Tags :
Next Story