ஐபிஎல் : கே.எல்.ராகுல் சதம் - லக்னோ அணி 199 ரன்கள் குவிப்பு
20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு லக்னோ அணி 199 ரன்கள் எடுத்தது.
மும்பை,
இன்றைய ஐ.பி.எல். போட்டியில் 26-வது லீக் ஆட்டத்தில் மும்பை - லக்னோ அணிகள் மோதுகின்றன.இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .
அதன்படி லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது .தொடக்க வீரர்களாக களமிறங்கிய டி காக் ,கே.எல் ராகுல் சிறப்பாக விளையாடினர் .தொடக்க விக்கெட்டுக்கு 52 ரன்கள் சேர்த்தனர் .இதனை தொடர்ந்து டி காக் 13 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் .
பின்னர் வந்த மணிஷ் பாண்டே , ராகுலுடன் சேர்ந்து சிறப்பாக விளையாடினார் .பந்துகளை பவுண்டரி ,சிக்சருக்கு பறக்கவிட்டனர் .சிறப்பாக விளையாடிய கே.எல் ராகுல் 29 பந்துகளில் அரைசதம் அடித்தார். மணிஷ் பாண்டே 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்
அரைசதம் கடந்தபிறகு அதிரடியாக விளையாடிய கே,எல் 56 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார் .இதனால் இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு லக்னோ அணி 199 ரன்கள் எடுத்தது.ராகுல் 103 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இதனை தொடர்ந்து 200 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் மும்பை அணி விளையாடுகிறது
Related Tags :
Next Story