"அவர் இந்தியாவுக்காக விளையாடப் போகிறார்"- இளம் வேகப்பந்து வீச்சாளர் மீது சுனில் கவாஸ்கர் கணிப்பு
![அவர் இந்தியாவுக்காக விளையாடப் போகிறார்- இளம் வேகப்பந்து வீச்சாளர் மீது சுனில் கவாஸ்கர் கணிப்பு அவர் இந்தியாவுக்காக விளையாடப் போகிறார்- இளம் வேகப்பந்து வீச்சாளர் மீது சுனில் கவாஸ்கர் கணிப்பு](https://img.dailythanthi.com/Articles/2022/Apr/202204191253206109_He-is-going-to-play-for-India--Sunil-Gavaskars_SECVPF.gif)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர்,இளம் வேகப்பந்து வீச்சாளர் இந்தியாவுக்காக விளையாடப் போகிறார் என்று கூறியுள்ளார் .
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் தனது வேகத்தாலும், தொடர்ந்து 150 கி.மீ வேகத்தில் பந்து வீசுவதால் , அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் .
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஹைதராபாத் அணியின் முந்தைய போட்டியில் ,இன்னிங்ஸின் இறுதி ஓவரில் மூன்று விக்கெட்டுகள் உட்பட நான்கு விக்கெட் வீழ்த்தினார் உம்ரன் மாலிக் .
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், உம்ரான் இந்தியாவுக்காக விளையாடப் போகிறார் என்று கூறியுள்ளார் .
இது குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸில் கிரிக்கெட் நேரலையில் அவர் கூறுகையில் ;
உம்ரான் மாலிக் தனது வேகத்தால் மிகவும் ஈர்க்கப்ட்டுள்ளார் , ஆனால் பந்துவீச்சில் அவரது வேகத்தை விட, அவரது துல்லியம் (அது ஈர்க்கப்பட்டது). மேலும் உம்ரன் மாலிக் இந்தியாவுக்காக விளையாடப் போகிறார் என்று கூறியுள்ளார் .
Related Tags :
Next Story