ஐபிஎல் : சென்னை அணிக்கு மேலும் பின்னடைவு - வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னே தொடரிலிருந்து விலகல்
![Image Courtesy : IPL Image Courtesy : IPL](https://img.dailythanthi.com/Articles/2022/Apr/202204211517004740_IPL-Chennai-teams-main-fast-bowler-withdraws-from-the_SECVPF.gif)
ஆடம் மில்னே காயம் காரணமாக இந்த சீசனில் இனி வரும் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்
மும்பை,
ஐ.பி.எல். 20 ஒவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெறும் , போட்டியில் மும்பை -சென்னை அணிகள் மோதுகின்றன .
இந்நிலையில் சென்னை அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஆடம் மில்னே காயம் காரணமாக இந்த சீசனில் இனி வரும் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார் .ஐபிஎல் ஏலத்தில் ரூ 1.90 கோடிக்கு சென்னை அணி இவரை ஏலத்தில் எடுத்தது .
இவருக்கு மாற்று வீரராக 19 வயதுடையோருக்கான உலக கோப்பையில் விளையாடிய இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் மதீசா பதிராணா சென்னை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் .
Related Tags :
Next Story