ஐபிஎல்: ஒரே ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்கள்: ஜோஸ் பட்லர் அதிரடி அரைசதம்
இன்று நடக்கும் 44-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
மும்பை,
15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.மும்பை டி.ஓய்.பட்டீல் மைதானத்தில் இன்று நடக்கும் 44-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர் ,படிக்கல் ,களமிறங்கினர் . அணியின் ஸ்கோர் 27 ரன்னாக இருந்தபோது படிக்கல் ஆட்டமிழந்தார் .
பின்னர் வந்த கேப்டன் சாம்சன் 16 ரன்களில் ஆட்டமிழந்தார் .இதன் பிறகு வந்த டேரில் மிட்செல் பட்லருடன் இணைந்து நிதானமாக விளையாடினார் .டேரில் மிட்செல் 17 ரன்களில் ஆட்டமிழந்தார் .
மறுபுறம் நிலைத்து நின்று சிறப்பாக விளையாடிய பட்லர் அரைசதம் அடித்தார்.
அவர் மும்பை அணியின் ஹிரித்திக் ஷோக்கீன் வீசிய ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்கள் பறக்க விட்டார் .தொடர்ந்து விளையாடிய பட்லர் ,52 பந்துகளில்
67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்
Related Tags :
Next Story