ரூ.50 லட்சம் போதைப்பொருள் பறிமுதல் : நைஜீரிய வாலிபர் கைது


ரூ.50 லட்சம் போதைப்பொருள் பறிமுதல் : நைஜீரிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 4 Sep 2018 11:59 PM GMT (Updated: 4 Sep 2018 11:59 PM GMT)

மும்பை ஜோகேஸ்வரி சகாக்கர் ரோடு பகுதியில் போதைப்பொருள் விற்க ஒருவர் வரவுள்ளதாக அம்போலி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

மும்பை,

போலீசார் அந்த பகுதியில் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது வெளிநாட்டு வாலிபர் ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அவர் கொண்டுவந்த பையில் சோதனையிட்டனர்.

அப்போது அந்த பையில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. 472 கிராம் எடை கொண்ட அந்த போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும்.

இதையடுத்து போலீசார் அந்த வெளிநாட்டு வாலிபரை கைது செய்தனர். விசாரணையில் அவர் நைஜீரிய நாட்டை சேர்ந்த பேமி ஒலிங்கியா (வயது29) என்பது தெரியவந்தது. 

Next Story