திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்


திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
x
தினத்தந்தி 7 Feb 2019 9:45 PM GMT (Updated: 7 Feb 2019 12:21 PM GMT)

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது.

மாசித் திருவிழா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உப கோவிலான வெயிலுகந்தம்மன் கோவிலில் மாசித் திருவிழா கடந்த மாதம் 29–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடந்த விழா நாட்களில் தினமும் காலையில் அம்மன் பூஞ்சப்பரத்திலும், மாலையில் அம்மன் பூத வாகனம், சிம்ம வாகனம், காளை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களிலும் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

10–ம் நாளான நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. இதனை முன்னிட்டு, அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அம்மன் தேரில் எழுந்தருளினார்.

தேரோட்டம்

காலை 6 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. திரளான பக்தர்கள் பக்தி கோ‌ஷங்களை முழங்கியவாறு, வடம் பிடித்து தேரை இழுத்தனர். நான்கு ரத வீதிகளின் வழியாக சென்ற தேர் மீண்டும் கோவில் நிலையை வந்தடைந்தது. விழாவில் கோவில் உதவி ஆணையர் செல்வராஜ், இளநிலை பொறியாளர் சந்தானகிருஷ்ணன், ஓய்வுபெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனர் டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.


Next Story