கல்பாக்கம் அருகே கிணற்றில் ஆண் பிணம்; கொலையா? போலீசார் விசாரணை


கல்பாக்கம் அருகே கிணற்றில் ஆண் பிணம்; கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 14 Jun 2019 10:15 PM GMT (Updated: 14 Jun 2019 7:58 PM GMT)

கல்பாக்கம் அருகே கிணற்றில் ஆண் பிணம் கிடந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கல்பாக்கம்,

கல்பாக்கத்தை அடுத்த அணைக்கட்டு போலீஸ் நிலையத்துக்குட்பட்ட நெல்வாய் ஊராட்சி சாத்தமங்கலம் கிராமத்தில் உள்ள வயல்வெளி கிணற்றில் நேற்று முன்தினம் ஆண் பிணம் மிதப்பதாக அணைக்கட்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து மதுராந்தகம் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் உத்தரவின்படி செய்யூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலிங்கம், சப் –இன்ஸ்பெக்டர் ராமசாமி உள்பட போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர்.

கிணற்றில் பிணமாக மிதந்தவருக்கு 60 வயது இருக்கும். உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. இறந்து பேனவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. போலீசார் உடலை மீட்டு மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அவர் கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story