இறைச்சி கடைகளில் கூட்டம் சமூக இடைவெளியை மறந்த பொதுமக்கள்


இறைச்சி கடைகளில் கூட்டம் சமூக இடைவெளியை மறந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 28 Jun 2020 11:58 PM GMT (Updated: 28 Jun 2020 11:58 PM GMT)

கொரோனா வைரஸ் தமிழகத்தில் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. இதனால் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பெரம்பலூர்,

கொரோனா வைரஸ் தமிழகத்தில் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. இதனால் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் கொரோனா சமூக பரவலாக மாற வாய்ப்புள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெரம்பலூர் நகரில் உள்ள இறைச்சி கடைகளில் இறைச்சி வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் அங்கு வந்த பொதுமக்கள் சமூக இடைவெளியை மறந்து இறைச்சி வாங்கி சென்றனர். இதனால் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளது. மேலும் கடைகளின் முன்பு சமூக இடைவெளி விட்டு பொதுமக்கள் நிற்பதற்கு வட்டம் போடப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு நடத்தி பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வலியுறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story