பள்ளிகள் திறக்கப்பட்டதை கண்டித்து கல்வித்துறை அலுவலகம் முற்றுகை


பள்ளிகள் திறக்கப்பட்டதை கண்டித்து கல்வித்துறை அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 13 Oct 2020 10:42 PM GMT (Updated: 13 Oct 2020 10:42 PM GMT)

புதுச்சேரி, காரைக்காலில் கொரோனா தீவிரம் அடைந்து வரும் நிலையில் பள்ளிகள் திறப்பை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி காரைக்கால் போராளிகள் குழுவினர் நேற்று மாவட்ட கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

காரைக்கால்,

புதுச்சேரி, காரைக்காலில் கொரோனா தீவிரம் அடைந்து வரும் நிலையில் பள்ளிகள் திறப்பை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி காரைக்கால் போராளிகள் குழுவினர் நேற்று மாவட்ட கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராளிகள் குழு நிர்வாகிகள் ரகீம், பிலால், அன்சாரி, பாரூக், இஸ்மாயில், வெங்கடேஷ், ஜான்சன், பிரபு, பிரபாகரன், விடுதலைக்கனல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழக பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகளை திறக்கக் கூடாது என முறையிட்டும் புதுவை அரசு பள்ளிகளை திறந்தது கண்டிக்கத்தக்கது. பள்ளி திறக்கப்பட்டதால் புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளி மாணவர் ஒருவர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். மற்ற மாணவர்களுக்கும் பரவும் முன், பள்ளிகள் திறப்பை மறுபரிசீலனை செய்து, பள்ளிகளை அரசு உடனே மூடவேண்டும் என்று இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

அப்போது கல்வித்துறை அலுவலகத்திற்குள் நுழைய முயன்ற அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் போராளிகள் குழுவிற்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கொரோனா நேரத்தில் அனுமதி இன்றி போராட்டம் நடத்தியதால் அனைவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Next Story