போலீஸ் வாகன சோதனையில் 13 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது


போலீஸ் வாகன சோதனையில் 13 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது
x
தினத்தந்தி 7 March 2021 10:42 PM GMT (Updated: 7 March 2021 10:42 PM GMT)

போலீஸ் வாகன சோதனையில் 13 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

ஆவடி,

ஆவடியை அடுத்த கவரபாளையம் ஆஞ்சநேயர் கோவில் அருகே சி.டி.எச். சாலையில் ஆவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் காளிராஜ் மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரே மோட்டார்சைக்கிளில் சந்தேகப்படும்படியாக வந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். பின்னர் அவர்களிடம் இருந்த பையை சோதனை செய்தபோது அதில் கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது.

இதையடுத்து அண்ணனூரை சேர்ந்த கோகுல் என்ற கோகுலகிருஷ்ணன் (வயது 46), ஆவடியை சேர்ந்த ராஜேஷ் (25), குமரவேலு (25) ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 13 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

 


Next Story